பொது நூலகத் துறையில் பகுதிநேர நூலகங்கள் திறப்பதற்கான வழிமுறைகள்

பொது நூலக இயக்ககம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 மக்கள் தொகை கொண்ட நூலகங்கள் இல்லாத கிராமங்களில், பொதுமக்களின் அத்தியாவசிய பயன்பாட்டினை பூர்த்தி செய்யும் வகையில், அந்தந்த  ஊர் பொது மக்கள்  / ஊராட்சி மன்ற தலைவர் ஒத்துழைப்புடன் கீழ்க்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்து பெறப்பட்டு  பகுதிநேர நூலகங்கள் திறக்கப்படுகின்றன.
நிபந்தனைகள்
(i)  நூலகம் செயல்பட  வாடகையில்லா இலவசக் கட்டடம் நூலக   ஆணைக்குழுவிற்கு  வழங்கப்பட வேண்டும்.
(ii)  சொந்தக் கட்டடம் கட்ட 5 சென்ட் காலிமனை நூலக       ஆணைக்குழுவிற்கு இலவசமாக பத்திரப்பதிவு செய்து   பெறப்பட வேண்டும்.
(iii)  தலா ரூ.1,000/- வீதம் நன்கொடையாக செலுத்தி 2 நபர்கள்  புரவலர்களாக சேர்க்கப்பட வேண்டும்.
(iv)  நூலக உறுப்பினர் காப்புத் தொகை ரூ.20/-ம் ஆண்டு சந்தா  ரூ.10/- ஆக மொத்தம் ரூ.30/- செலுத்தி 200 நபர்கள் நூலக   உறுப்பினர்களாக  சேர்க்கப்பட வேண்டும்.(v)  சுமார் ரூ.2,000/- மதிப்புள்ள தளவாடங்கள் இலவசமாக  வழங்கப்பட வேண்டும்.