நோக்கம் மற்றும் குறிக்கோள்கள்

நோக்கம்

தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு பொது நூலகச் சேவையானது பின்வரும் இலக்குகளை உள்ளடக்கிச் செயல்பட்டு வருகிறது.

  • குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்துதல்.
  • அனைத்து தரப்பினருக்கும் சுயகல்வி மற்றும் முறையான கல்விக்கு துணை நிற்றல்.
  • தனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
  • குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுதல்.
  • பாரம்பரிய கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கலைகள், அறிவியல் சாதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.
  • நடத்து கலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல்.
  • அனைத்து தரப்பினருக்குமான கலை, இலக்கிய, கல்வி சார்ந்த செயல்பாடுகளில் பங்கெடுத்தல்.

குறிக்கோள்கள்

  • நிறைந்த நூலகப் பணியின் மூலம் அனைத்து தரப்பினரின் தகவல் தேவையினைப் பூர்த்தி செய்தல்.
  • பழைய மற்றும் அரிய நூல்களை மின்மயமாக்கி, பாதுகாத்தல்.
  • 1,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள இடங்களில் நூலகங்களை அமைத்து செயல்படுத்துதல்.
  • நூலகங்களில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கச் செய்தல்.
  • நூலகங்களில் தரமான நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் நூல்களை வாங்கி வழங்குதல்.
  • நூலகங்களில் நவீன தொழில் நுட்பத்தினை புகுத்தி நூலகச் சேவையினை மேம்படுத்துதல்.